BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, March 29, 2009

நட்பில் மறந்த நினைவுகள்

எண்ணிப் பார்க்கையில்
எண்ணத்தில் தோன்றவில்லை
என்று நாம்
நண்பர்கள் ஆனோம்
என்று

நம்முள் ஏற்பட்ட
சில நிகழ்வுகள்
நல்ல நினைவுகளாய்
உருபெற்று நம்
நட்பிற்கு வித்திட்டது

வித்திட்ட நிகழ்வுகள்
நம் நினைவிலில்லை
காரணம் வித்திட்ட
அக்காலத்தை விட
நம் நட்பு
வளரும் இக்காலம்
வசந்த காலமாய்
இருப்பதனாலோ......

காதல்

காதல்
கண்ணை கண்
நோக்குவதால்
பிறப்பதில்லை..
காதல்
மனதை மனதால்
உணர்வதால்
பிறந்து வளர்வதுவே
காதல்...

என்னென உரைப்பது....

இன்று தான்
நீ என்
அன்பை உணர்ந்தாய்
என் பிறப்பின்
பயனை அடைந்தேன்.....
இன்று என்
அகவை அறுபது......

வாழ்வில் இன்பம்

கற்கும் காலத்தில்
கல்லாமல் அதன்
காரணமாய்
வளம் கொள்ளாமல்
போனவன் வாக்கு
"நான் வாழ்வில் வெற்றிபெறவில்லை
என் வாழ்வில் திருப்தியில்லை"

நற் கல்வி
கற்று களம்
பல சென்று
வளம் பல
பெற்றவன் வாக்கு
"நான் வாழ்வில் வெற்றிபெறவில்லை
என் வாழ்வில் திருப்தியில்லை"

வாழ்க்கையில்
வெற்றிபெற
வாழ்க்கை ஓர்
போட்டியோ போராட்டமோ
இல்லை....

வாழ்க்கை
ஓர் வாழும் காலம்...
ஓர் வாழும் களம்...
வாழும் களத்தில்
வாழும் காலத்தில்
மனம் விரும்பும்
நல்லவைகளை இலக்காக்கி
நல் வழியில்
முயன்று அடைந்தால்
மனதில் ஓர்
உணர்ச்சி அது மகிழ்ச்சி....

இலக்கை அடைந்ததும்
மட்டும் மகிழாமல்
இலக்கை முயல்வதிலும்
மகிழ்ச்சியை கண்டால்
வாழ்வே இன்பமயம்....

உயிர்

வாழவைக்கும்
உயிர்
சாகப் பிறந்தது
மரணம்
உயிரின் கடமை...

இலக்கணமும் இலக்கியமும்

நமக்கெண
நல் இலக்கணங்களை
நாம் வகுத்து
அதன்படி வாழ்ந்தால்
நம் வாழ்வும்
ஓர் இலக்கியம்தான்..

Saturday, March 14, 2009

மன்னிப்பு

எல்லா தவறுகளுக்கும்
மன்னிப்புண்டு
அனால்
மனதை கொன்றதற்கு
மன்னிப்பில்லை......
நடை பிணம்
யாரையும் மன்னிக்காது.

அன்பு

அன்பு
உணர்த்தப்படுவது அல்ல,
உணரப்படுவது.

நிகழ்வுகள் நினைவுகள்

நேற்றைய நிகழ்வுகள்
இன்றைய நினைவுகள்

நேற்றைய நினைவுகள்
இன்றைய அனுபவம்

நேற்றைய அனுபவம்
இன்றைய நடைமுறை

மனிதன்

சந்தர்பத்தை எதிர்பார்பவன்
சாதாரண மனிதன்
சந்தர்பத்தை ஏற்படுத்துபவன்
சாதிக்கும் மனிதன்

Friday, March 6, 2009

நிலவும் சூரியனும்

அன்று
பகலில்
குளிர்ந்த
நிலவாய்
நீ

இன்று
இரவில்
தகிக்கும்
சூரியனாய்
நான்

அம்மா

அன்றும்
இன்றும்
என்றென்றும்
நான்
நானாய்
இருப்பதன்
காரணம்
என் அம்மா

Thursday, March 5, 2009

சாயல்

என் கண்ணுள்ளே
நீ நுழைந்ததுமே
என் இதயத்தில்
உன் சாயல்

உன் சாயலிலே
கண்ட கணவெல்லாம்
மறந்தேனே
நான் சிறிதாய்

முழு மனதாய்
நினைத்ததெல்லாம்
மறந்தேனே
அரை மனதாய்

உன் சாயலிலே
உன் நோக்கி
சாய்ந்தேனே
நான் முழுதாய்

நடக்கும் சாலையிலும்
மறக்கவில்லை
மறையவில்லை
உன் சாயல்

மழை கொணர்ந்த
சாரலிலும்
கண்டேனே
உன் சாயல்

நான் கண்திறந்து
காணும் பொருளெல்லாம்
கண்டேனே
உன் சாயல்

நான் கண்மூடி
சாய்கையிலும்
என் கண்ணுள்ளே
உன் சாயல்

Monday, March 2, 2009

வாழ்க்கை

எதிர்பாரததை
எதிர்பார்த்து
எதிர்படுவதை
எதிர்கொண்டு
வீழாமல்
வாழ்வதுவே
வாழ்க்கை