எண்ணிப் பார்க்கையில்
எண்ணத்தில் தோன்றவில்லை
என்று நாம்
நண்பர்கள் ஆனோம்
என்று
நம்முள் ஏற்பட்ட
சில நிகழ்வுகள்
நல்ல நினைவுகளாய்
உருபெற்று நம்
நட்பிற்கு வித்திட்டது
வித்திட்ட நிகழ்வுகள்
நம் நினைவிலில்லை
காரணம் வித்திட்ட
அக்காலத்தை விட
நம் நட்பு
வளரும் இக்காலம்
வசந்த காலமாய்
இருப்பதனாலோ......
Sunday, March 29, 2009
நட்பில் மறந்த நினைவுகள்
Posted by Aravind Thiagarajan at 9:32 PM 0 comments
காதல்
காதல்
கண்ணை கண்
நோக்குவதால்
பிறப்பதில்லை..
காதல்
மனதை மனதால்
உணர்வதால்
பிறந்து வளர்வதுவே
காதல்...
Posted by Aravind Thiagarajan at 2:47 PM 0 comments
என்னென உரைப்பது....
இன்று தான்
நீ என்
அன்பை உணர்ந்தாய்
என் பிறப்பின்
பயனை அடைந்தேன்.....
இன்று என்
அகவை அறுபது......
Posted by Aravind Thiagarajan at 2:32 PM 1 comments
வாழ்வில் இன்பம்
கற்கும் காலத்தில்
கல்லாமல் அதன்
காரணமாய்
வளம் கொள்ளாமல்
போனவன் வாக்கு
"நான் வாழ்வில் வெற்றிபெறவில்லை
என் வாழ்வில் திருப்தியில்லை"
நற் கல்வி
கற்று களம்
பல சென்று
வளம் பல
பெற்றவன் வாக்கு
"நான் வாழ்வில் வெற்றிபெறவில்லை
என் வாழ்வில் திருப்தியில்லை"
வாழ்க்கையில்
வெற்றிபெற
வாழ்க்கை ஓர்
போட்டியோ போராட்டமோ
இல்லை....
வாழ்க்கை
ஓர் வாழும் காலம்...
ஓர் வாழும் களம்...
வாழும் களத்தில்
வாழும் காலத்தில்
மனம் விரும்பும்
நல்லவைகளை இலக்காக்கி
நல் வழியில்
முயன்று அடைந்தால்
மனதில் ஓர்
உணர்ச்சி அது மகிழ்ச்சி....
இலக்கை அடைந்ததும்
மட்டும் மகிழாமல்
இலக்கை முயல்வதிலும்
மகிழ்ச்சியை கண்டால்
வாழ்வே இன்பமயம்....
Posted by Aravind Thiagarajan at 2:30 PM 0 comments
உயிர்
வாழவைக்கும்
உயிர்
சாகப் பிறந்தது
மரணம்
உயிரின் கடமை...
Posted by Aravind Thiagarajan at 1:53 PM 0 comments
இலக்கணமும் இலக்கியமும்
நமக்கெண
நல் இலக்கணங்களை
நாம் வகுத்து
அதன்படி வாழ்ந்தால்
நம் வாழ்வும்
ஓர் இலக்கியம்தான்..
Posted by Aravind Thiagarajan at 1:44 PM 0 comments
Saturday, March 14, 2009
மன்னிப்பு
எல்லா தவறுகளுக்கும்
மன்னிப்புண்டு
அனால்
மனதை கொன்றதற்கு
மன்னிப்பில்லை......
நடை பிணம்
யாரையும் மன்னிக்காது.
Posted by Aravind Thiagarajan at 5:26 PM 0 comments
நிகழ்வுகள் நினைவுகள்
நேற்றைய நிகழ்வுகள்
இன்றைய நினைவுகள்
நேற்றைய நினைவுகள்
இன்றைய அனுபவம்
நேற்றைய அனுபவம்
இன்றைய நடைமுறை
Posted by Aravind Thiagarajan at 5:15 PM 0 comments
மனிதன்
சந்தர்பத்தை எதிர்பார்பவன்
சாதாரண மனிதன்
சந்தர்பத்தை ஏற்படுத்துபவன்
சாதிக்கும் மனிதன்
Posted by Aravind Thiagarajan at 5:11 PM 0 comments
Friday, March 6, 2009
நிலவும் சூரியனும்
அன்று
பகலில்
குளிர்ந்த
நிலவாய்
நீ
இன்று
இரவில்
தகிக்கும்
சூரியனாய்
நான்
Posted by Aravind Thiagarajan at 6:42 PM 0 comments
அம்மா
அன்றும்
இன்றும்
என்றென்றும்
நான்
நானாய்
இருப்பதன்
காரணம்
என் அம்மா
Posted by Aravind Thiagarajan at 6:36 PM 0 comments
Thursday, March 5, 2009
சாயல்
என் கண்ணுள்ளே
நீ நுழைந்ததுமே
என் இதயத்தில்
உன் சாயல்
உன் சாயலிலே
கண்ட கணவெல்லாம்
மறந்தேனே
நான் சிறிதாய்
முழு மனதாய்
நினைத்ததெல்லாம்
மறந்தேனே
அரை மனதாய்
உன் சாயலிலே
உன் நோக்கி
சாய்ந்தேனே
நான் முழுதாய்
நடக்கும் சாலையிலும்
மறக்கவில்லை
மறையவில்லை
உன் சாயல்
மழை கொணர்ந்த
சாரலிலும்
கண்டேனே
உன் சாயல்
நான் கண்திறந்து
காணும் பொருளெல்லாம்
கண்டேனே
உன் சாயல்
நான் கண்மூடி
சாய்கையிலும்
என் கண்ணுள்ளே
உன் சாயல்
Posted by Aravind Thiagarajan at 8:40 PM 0 comments
Monday, March 2, 2009
வாழ்க்கை
எதிர்பாரததை
எதிர்பார்த்து
எதிர்படுவதை
எதிர்கொண்டு
வீழாமல்
வாழ்வதுவே
வாழ்க்கை
Posted by Aravind Thiagarajan at 6:46 PM 0 comments