BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, March 29, 2009

வாழ்வில் இன்பம்

கற்கும் காலத்தில்
கல்லாமல் அதன்
காரணமாய்
வளம் கொள்ளாமல்
போனவன் வாக்கு
"நான் வாழ்வில் வெற்றிபெறவில்லை
என் வாழ்வில் திருப்தியில்லை"

நற் கல்வி
கற்று களம்
பல சென்று
வளம் பல
பெற்றவன் வாக்கு
"நான் வாழ்வில் வெற்றிபெறவில்லை
என் வாழ்வில் திருப்தியில்லை"

வாழ்க்கையில்
வெற்றிபெற
வாழ்க்கை ஓர்
போட்டியோ போராட்டமோ
இல்லை....

வாழ்க்கை
ஓர் வாழும் காலம்...
ஓர் வாழும் களம்...
வாழும் களத்தில்
வாழும் காலத்தில்
மனம் விரும்பும்
நல்லவைகளை இலக்காக்கி
நல் வழியில்
முயன்று அடைந்தால்
மனதில் ஓர்
உணர்ச்சி அது மகிழ்ச்சி....

இலக்கை அடைந்ததும்
மட்டும் மகிழாமல்
இலக்கை முயல்வதிலும்
மகிழ்ச்சியை கண்டால்
வாழ்வே இன்பமயம்....

0 comments: