BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Tuesday, May 26, 2009

மனதினுள் மழை

பெய்யன பெய்யும்
மழையில்
ஓர் குடையில்
உன்னுடன் இணைந்து
நான் நடக்கையில்
என் இதயத்தில்
இளஞ்சாரல்...

மழை கொணர்ந்த
குளிரில், வெப்பம்
நிறைந்த உன் சுவாசம்
என் சுவாசம்
செல்ல என்னுளே
ஓர் சிறு புயல்...

விண்ணில் மின்னிய
மின்னலை கண்டு
உன் விழிகள்
இமை மூடி
இமை திறக்க
என் விழிகளில்
ஓராயிரம் மின்னல்கள் ....

பெய்யன பெய்த
மழை சட்டென நின்றதும்
நீ என்
குடை அகன்றதும்
என் இதயத்தில்
சிறு இடி ...

மீண்டும்
ஓர் குடையில்
உன்னுடன் நடக்க
என் மனதினுள்
ஆசை மேகங்கள்
ஆயிரம் சூழ்ந்தன
விண்ணில் மழை வேண்டி...

உன்னால்
என் மனதினுள்
மழை பொழிய
விண்ணில்
மழை வருமோ...

கணவு

இம்மண்ணில் உன்னில்
மயங்கிய நான்
உன்னோடு இணைந்து
விண்ணில் பறக்கிறேன்
முகிலோடு மிதக்கிறேன்
நிலவை நிலத்திற்கு
அழைக்கிறேன்...

இவைகள் எல்லாம்
கணவே என்றெண்ணி
உறக்கத்திலிருந்து
விழித்து பார்க்கையில்
என் விழிகள்
கண்டது இமை முடிய
உன் விழிகளை...

எவ்வளவு நெருக்கத்தில்
நீ இருந்தாலும்
நான் என்
கண்களை மூடினால்
கணவாய் வருவது
நீ தானடி
எந்தன் கண்மணியே...

மாற்றம்

மாற்றமில்லாமல்
மாந்தர் அனைவரும்
விரும்புவது
மாற்றத்தை....
நமக்கான மாற்றத்தை...

நாம் விரும்பும் மாற்றங்கள்
நம்மில் தொடங்கட்டும்
நம்மில் தொடங்கும்
மாற்றங்கள்
இச்சமுதாயத்தை
அடையட்டும்...

இந்த சமுதாயம்
அடைந்திருக்கும்
மாற்றங்கள் அனைத்தும்
ஓர் தனி மனிதனின்
மனதில் உதித்த
மாற்றம் தானே...
நம்மில் தொடங்கும்
மாற்றமும் இச்சமுதாயத்தை
மாற்றும்...

நான்கு விழிகள்

நான்கு விழிகள்
ஒரு மொழி
பேசின....
உள்ளத்தில் ஒளிந்திருந்த
உரைக்க முடியா உணர்வுகளை
விழிகள் வெளிப்படுத்தி உணர்ந்தன...
உணர்வுகளை உணர்ந்த விழிகள்
இன்பத்தில் இமைகளை இமைத்தன....

கரு விழிகள் நான்கும்
வண்ணக் கனவுகள்
பல கண்டன....
அவ்விழிகளில்
இரு விழி உனது
இரு விழி எனது...

உயிரின் வலி

என்னில்
எனை மறந்து
உனை உணர்ந்ததால்
உள்ளம் உண்மை என
உரைப்பது உனை மட்டுமே....

மனம் விரும்பும் நீ
நினைவாய் மட்டும் இருக்கையில்
நித்தம் உனை கண் தேடுதே
கண்ணீர் இமை மோதுதே
இதயம் அதில் நனையுதே
உயிரும் உனை சேறுதே
உன்னால் தானே....

Tuesday, May 19, 2009

காத்திருக்கிறேன்.....

என் விழிகள்

உன்னை காணவே
விழிதிறிக்கின்றன....

என் செவிகள்
உன் மொழி கேட்கவே
சிலிர்ப்புடன் காத்திரிகின்றன....

என் இதயம்
உனை உணரவே
இன்று துடித்து கொண்டிருக்கிறது...

என்னுள் அணுவாய்
இருக்கும் நீ
கருவாய் மாறி

என் உயிராய் மலர்ந்து
உன்னோடு நான் வாழ்வது
எப்போது என் மகளே?

உனக்காக நான் காத்திருக்கின்றேன்....

Sunday, May 10, 2009

உணர்வுகளை உணர...

உன் அருகில்

நான் இருக்கையில்
உன்னால் என்னுள்ளே
எழும் உணர்வுகளை
உணர்ச்சிகளாய் உனக்கு உணர்த்த...
உன்னை நான் உணர...
நான் நினைத்தவுடன்
நிலா உதித்திட வேண்டும்....

எனது ஐம்பதாவது கவிதை -"சமர்ப்பணம்"

அணுவை கருவாக்கி

கருவை உயிராக்கி
உயிரை உடலாக்கி
உடலை எனதாக்கி
என்னை இவுலகம்
அழைத்து வந்தது
என் அம்மா.....

தம் செந்நீரை நன்னீராய் பாய்ச்சி
தம் உழைப்பை உரமாக்கி
தம்மை என்னுள் விதைத்து
என்னை விளைவித்தார்கள்
எனை ஈன்ற பெற்றோர்...

ஆண்டுகள் ஓடின...
நான் விளைந்தேன்
நற் பயிராய்....
நான் மலர்ந்தேன்
நன் மலராய்....

விளைவித்த பயிராய்
என்னை அறுவடை செய்யாமல்
மலர்வித்த மலராய்
எனை கொய்யாம்மல்
எனை பாசமுடன் என்றும் நேசித்தனர்..

நான் பயிராய் கருகாமலும்
நான் மலராய் உதிராமலும்
தன் அன்பை நீராய் என்றும் பாய்ச்சி
எனை அரண் போல் காக்கும்
என் பெற்றோர்க்கு
எனது ஐம்பதாவது கவிதை
சமர்ப்பணம்......

கடல் கடந்த உணர்வுகள்

நீ கடல் கடந்து வாழ்ந்தாலும்

நித்தம் என் கனவில் வருவது நீ தான்
நிலமும் நீரும் நம்மை பிரித்தாலும்
நம் நினைவுகள் நம்மை இணைக்கும்....

நான் உதிக்கும் நிலவை கண்டு
உன்னை நினைக்கையில்
நீ மயக்கும் மாலையில்
என்னில் மயங்குகிறாய் .....

இருவரும் இணைந்து
இயற்கையோடு
இணைய முடியா
தூரத்தில் நாம்....

நம்மிடையே தூரமும் காலமும்
அதிகம் என்றாலும்
அடி மனதில்
அழியா ஆன்மாவாய்
நமக்கு நாம்...

உள்ளே வெளியே

நீ

பிரசவ அறையின் உள்ளே
ஓர் தெய்வமாய்
நம் இறைவனை
ஈன்றெடுக்கையில்.....

உங்களையும்,
உலகில் உள்ள
அணைத்து தெய்வங்களையும்
பிராத்திக்கும் பக்தனாய்
வெளியில் நான்....

உன்னுடன் ஓர் உலா

உன் விரல் பிடித்து

உன்னுடன் உலா வருகையில்
என் விழி வழிகளுக்காக ஏங்கும்
உள்ளம் உவகையில் துள்ளும்
என் கால்கள் உனை நோக்கி நடக்கும்
உன் சுவாசம் என் சுவாசம் ஆகும்
உடலெங்கும் உற்சாகம் பரவும்
இவை அனைத்தும் இல்லாமல் போகும்
உன் விரல் உன்னை அறியாமல்
என்னிலிருந்து விடுபட்டால்......

பிராத்தனை

அவன் முதுமையில்

தன் மகன்
தன்னை போல்
முதியோர் இல்லத்தில்
பிராத்திக்க கூடாது என்று
அவள் இறைவனிடம்
பிராத்தனை செய்தாள்....

Tuesday, May 5, 2009

ஓர் உயிரின் கவிதை

உன்னை உணர்ந்தேன் என்னில் நானே
என்னை இழந்தேன் உன்னில் தானோ....
என்றும் இருப்பேன் உனக்கே உனக்காய்
எந்தன் இதயம் நீயே அன்பே..
விண்ணில் பறந்தேன் தன்னந் தனியே
உள்ளம் முழுதும் உந்தன் நினைவே...

அன்னம் மறந்தேன்
அகிலம் மறந்தேன்
அனைத்தும் நீயே என்றே உணர்ந்தேன்...
உன் உள்ளம் என்னும் மலரில் தானே
பனித்துளியாய் விழுந்தேன் நானே
உன் அன்பை இலங்கதிராய் உணர்ந்து
உன்னில் உன்னில் கரைவேன் நானே...

நினைவாய் நீ இருக்கையில்
நித்தம் உனை கண் தேடுது
கண்ணீர் இமை மோதுது
இதயம் அதில் நனையுது
உயிரும் உனை தேடுதே
உன்னால் தானே....
உன்னை உணர்ந்தேன் என்னில் நானே
என்னை உணர்வாய் உன்னில் நீயே....

இரவில் நீயும் கனவில் வந்தால்
விடியல் தள்ளி போகும் கண்ணே..
விழித்து பார்த்தல் விழியும் மனமும்
உன்னில் உன்னில் மயங்கும் மயங்கும்...
மனதில் மலர்வாய் வாடா மலராய்...
மலரவிடால் உதிர்வேன் சருகாய்...
இதயம் விரும்பும் இனிமை நீயே..
துன்பம் துறந்த, இன்பம் நீயே..

உன்னை உணர்ந்தேன் என்னில் நானே
என்னை உணர்வாய் உன்னில் நீயே....
விண்ணில் பறந்தேன் தன்னந் தனியே...
உள்ளம் முழுதும் உந்தன் நினைவே...

Friday, May 1, 2009

என் உணர்வின் உணர்வுகள்

எதிரில் வருவது
நீ என்றால்
எகிறிக் குதிக்குது
எந்தன் மனசு

எதிர் வந்த
நீ பேசாவிட்டால்
என்ன ஆகுமோ
என் மனசு...

உன்னை பார்த்த
என் விழிகள்
என்னை காண
மறுக்கிறதே..

எதை காண
கண் பார்த்தாலும்
உன் உருவே
தெரிகிறதே...

இன்ப இசை
எந்தன் செவியினுள்
சென்றாலும் உந்தன்
குரலே ஒலிக்கிறதே..

இத்தனை இன்பம்
தந்த நீ
உந்தன் இதயத்தில்
இடம் தரமாட்டாயா?....

எந்தன் மனதினுள்
நீ நுழைந்ததுமே
என்னுள்ளே
மாற்றங்கள் ஓராயிரம்...

அந்த மாற்றங்களை
நான் மறைக்க
நான் படும்
சிரமங்கள் பலவாயிரம்...

மாற்றங்களை மற்றவர்
உணரும் முன்னே
நீ முதலில்
உணர்ந்து விடு

என்னை உணர்ந்து என்
பிறப்பின் பயனை
நீ எனக்கு
தந்து விடு....

அவன்

அவன்
நீ பேசிய
வார்த்தைகளை புனைந்து
கவிஞன்
ஆனான்....

அவன்
உன்னை பல
வண்ணங்களில் வரைந்து
ஓவியன்
ஆனான்....

அவன்
உன்னை அவன்
மனதில் செதுக்கி
சிற்பி
ஆனான்...

அவன்
நீ அவனை
காதலித்த போது
உன் காதலன்
ஆனான்...

அவன்
நீ இன்னொருவனை
மணந்த போது
உன் அண்ணன்
ஆனான்...

அவன்
அவன் வாழ்வில்
என்ன
ஆனான்?

அதனை
நான்
மனநல மருத்துவராய்
ஆராய்கிறேன்...

தாயும் சேயும்

உணவைக் கண்டாலே
தாய்க்கு சேயின்
நினைவு ....
உணவை
ருசிக்கும் போது
சேய்க்கு தாயின்
நினைவு.....

நானும் புத்தன்

நானும் புத்தன் ஆனேன்
நீ
என்னோடு எப்போதும்
பேச வேண்டும்
என்ற ஆசையை
துறந்து...