பெய்யன பெய்யும்
மழையில்
ஓர் குடையில்
உன்னுடன் இணைந்து
நான் நடக்கையில்
என் இதயத்தில்
இளஞ்சாரல்...
மழை கொணர்ந்த
குளிரில், வெப்பம்
நிறைந்த உன் சுவாசம்
என் சுவாசம்
செல்ல என்னுளே
ஓர் சிறு புயல்...
விண்ணில் மின்னிய
மின்னலை கண்டு
உன் விழிகள்
இமை மூடி
இமை திறக்க
என் விழிகளில்
ஓராயிரம் மின்னல்கள் ....
பெய்யன பெய்த
மழை சட்டென நின்றதும்
நீ என்
குடை அகன்றதும்
என் இதயத்தில்
சிறு இடி ...
மீண்டும்
ஓர் குடையில்
உன்னுடன் நடக்க
என் மனதினுள்
ஆசை மேகங்கள்
ஆயிரம் சூழ்ந்தன
விண்ணில் மழை வேண்டி...
உன்னால்
என் மனதினுள்
மழை பொழிய
விண்ணில்
மழை வருமோ...
Tuesday, May 26, 2009
மனதினுள் மழை
Posted by Aravind Thiagarajan at 7:51 PM 1 comments
கணவு
இம்மண்ணில் உன்னில்
மயங்கிய நான்
உன்னோடு இணைந்து
விண்ணில் பறக்கிறேன்
முகிலோடு மிதக்கிறேன்
நிலவை நிலத்திற்கு
அழைக்கிறேன்...
இவைகள் எல்லாம்
கணவே என்றெண்ணி
உறக்கத்திலிருந்து
விழித்து பார்க்கையில்
என் விழிகள்
கண்டது இமை முடிய
உன் விழிகளை...
எவ்வளவு நெருக்கத்தில்
நீ இருந்தாலும்
நான் என்
கண்களை மூடினால்
கணவாய் வருவது
நீ தானடி
எந்தன் கண்மணியே...
Posted by Aravind Thiagarajan at 7:36 PM 0 comments
மாற்றம்
மாற்றமில்லாமல்
மாந்தர் அனைவரும்
விரும்புவது
மாற்றத்தை....
நமக்கான மாற்றத்தை...
நாம் விரும்பும் மாற்றங்கள்
நம்மில் தொடங்கட்டும்
நம்மில் தொடங்கும்
மாற்றங்கள்
இச்சமுதாயத்தை
அடையட்டும்...
இந்த சமுதாயம்
அடைந்திருக்கும்
மாற்றங்கள் அனைத்தும்
ஓர் தனி மனிதனின்
மனதில் உதித்த
மாற்றம் தானே...
நம்மில் தொடங்கும்
மாற்றமும் இச்சமுதாயத்தை
மாற்றும்...
Posted by Aravind Thiagarajan at 7:27 PM 0 comments
நான்கு விழிகள்
நான்கு விழிகள்
ஒரு மொழி
பேசின....
உள்ளத்தில் ஒளிந்திருந்த
உரைக்க முடியா உணர்வுகளை
விழிகள் வெளிப்படுத்தி உணர்ந்தன...
உணர்வுகளை உணர்ந்த விழிகள்
இன்பத்தில் இமைகளை இமைத்தன....
கரு விழிகள் நான்கும்
வண்ணக் கனவுகள்
பல கண்டன....
அவ்விழிகளில்
இரு விழி உனது
இரு விழி எனது...
Posted by Aravind Thiagarajan at 7:12 PM 0 comments
உயிரின் வலி
என்னில்
எனை மறந்து
உனை உணர்ந்ததால்
உள்ளம் உண்மை என
உரைப்பது உனை மட்டுமே....
மனம் விரும்பும் நீ
நினைவாய் மட்டும் இருக்கையில்
நித்தம் உனை கண் தேடுதே
கண்ணீர் இமை மோதுதே
இதயம் அதில் நனையுதே
உயிரும் உனை சேறுதே
உன்னால் தானே....
Posted by Aravind Thiagarajan at 7:10 PM 0 comments
Tuesday, May 19, 2009
காத்திருக்கிறேன்.....
என் விழிகள்
Posted by Aravind Thiagarajan at 7:40 PM 0 comments
Sunday, May 10, 2009
உணர்வுகளை உணர...
உன் அருகில்
Posted by Aravind Thiagarajan at 7:14 PM 0 comments
எனது ஐம்பதாவது கவிதை -"சமர்ப்பணம்"
அணுவை கருவாக்கி
Posted by Aravind Thiagarajan at 7:06 PM 2 comments
கடல் கடந்த உணர்வுகள்
நீ கடல் கடந்து வாழ்ந்தாலும்
Posted by Aravind Thiagarajan at 6:16 PM 0 comments
உள்ளே வெளியே
நீ
Posted by Aravind Thiagarajan at 5:43 PM 0 comments
உன்னுடன் ஓர் உலா
உன் விரல் பிடித்து
Posted by Aravind Thiagarajan at 5:40 PM 2 comments
பிராத்தனை
அவன் முதுமையில்
Posted by Aravind Thiagarajan at 10:06 AM 0 comments
Tuesday, May 5, 2009
ஓர் உயிரின் கவிதை
உன்னை உணர்ந்தேன் என்னில் நானே
என்னை இழந்தேன் உன்னில் தானோ....
என்றும் இருப்பேன் உனக்கே உனக்காய்
எந்தன் இதயம் நீயே அன்பே..
விண்ணில் பறந்தேன் தன்னந் தனியே
உள்ளம் முழுதும் உந்தன் நினைவே...
அன்னம் மறந்தேன்
அகிலம் மறந்தேன்
அனைத்தும் நீயே என்றே உணர்ந்தேன்...
உன் உள்ளம் என்னும் மலரில் தானே
பனித்துளியாய் விழுந்தேன் நானே
உன் அன்பை இலங்கதிராய் உணர்ந்து
உன்னில் உன்னில் கரைவேன் நானே...
நினைவாய் நீ இருக்கையில்
நித்தம் உனை கண் தேடுது
கண்ணீர் இமை மோதுது
இதயம் அதில் நனையுது
உயிரும் உனை தேடுதே
உன்னால் தானே....
உன்னை உணர்ந்தேன் என்னில் நானே
என்னை உணர்வாய் உன்னில் நீயே....
இரவில் நீயும் கனவில் வந்தால்
விடியல் தள்ளி போகும் கண்ணே..
விழித்து பார்த்தல் விழியும் மனமும்
உன்னில் உன்னில் மயங்கும் மயங்கும்...
மனதில் மலர்வாய் வாடா மலராய்...
மலரவிடால் உதிர்வேன் சருகாய்...
இதயம் விரும்பும் இனிமை நீயே..
துன்பம் துறந்த, இன்பம் நீயே..
உன்னை உணர்ந்தேன் என்னில் நானே
என்னை உணர்வாய் உன்னில் நீயே....
விண்ணில் பறந்தேன் தன்னந் தனியே...
உள்ளம் முழுதும் உந்தன் நினைவே...
Posted by Aravind Thiagarajan at 7:06 PM 2 comments
Friday, May 1, 2009
என் உணர்வின் உணர்வுகள்
எதிரில் வருவது
நீ என்றால்
எகிறிக் குதிக்குது
எந்தன் மனசு
எதிர் வந்த
நீ பேசாவிட்டால்
என்ன ஆகுமோ
என் மனசு...
உன்னை பார்த்த
என் விழிகள்
என்னை காண
மறுக்கிறதே..
எதை காண
கண் பார்த்தாலும்
உன் உருவே
தெரிகிறதே...
இன்ப இசை
எந்தன் செவியினுள்
சென்றாலும் உந்தன்
குரலே ஒலிக்கிறதே..
இத்தனை இன்பம்
தந்த நீ
உந்தன் இதயத்தில்
இடம் தரமாட்டாயா?....
எந்தன் மனதினுள்
நீ நுழைந்ததுமே
என்னுள்ளே
மாற்றங்கள் ஓராயிரம்...
அந்த மாற்றங்களை
நான் மறைக்க
நான் படும்
சிரமங்கள் பலவாயிரம்...
மாற்றங்களை மற்றவர்
உணரும் முன்னே
நீ முதலில்
உணர்ந்து விடு
என்னை உணர்ந்து என்
பிறப்பின் பயனை
நீ எனக்கு
தந்து விடு....
Posted by Aravind Thiagarajan at 4:07 PM 3 comments
அவன்
அவன்
நீ பேசிய
வார்த்தைகளை புனைந்து
கவிஞன்
ஆனான்....
அவன்
உன்னை பல
வண்ணங்களில் வரைந்து
ஓவியன்
ஆனான்....
அவன்
உன்னை அவன்
மனதில் செதுக்கி
சிற்பி
ஆனான்...
அவன்
நீ அவனை
காதலித்த போது
உன் காதலன்
ஆனான்...
அவன்
நீ இன்னொருவனை
மணந்த போது
உன் அண்ணன்
ஆனான்...
அவன்
அவன் வாழ்வில்
என்ன
ஆனான்?
அதனை
நான்
மனநல மருத்துவராய்
ஆராய்கிறேன்...
Posted by Aravind Thiagarajan at 3:19 PM 2 comments
தாயும் சேயும்
உணவைக் கண்டாலே
தாய்க்கு சேயின்
நினைவு ....
உணவை
ருசிக்கும் போது
சேய்க்கு தாயின்
நினைவு.....
Posted by Aravind Thiagarajan at 3:16 PM 2 comments
நானும் புத்தன்
நானும் புத்தன் ஆனேன்
நீ
என்னோடு எப்போதும்
பேச வேண்டும்
என்ற ஆசையை
துறந்து...
Posted by Aravind Thiagarajan at 3:09 PM 1 comments