நமக்கென நமக்காக
எல்லா உறவுகளையும்
படைத்தான் நம் இறைவன்...
நமக்கும் ஒரு உறவை
படைக்கும் உரிமை கொடுத்தான்
நாமும் படைத்தோம்
நம் நட்பை படைத்தோம்...
நம்மில் நமக்கு இருக்கும்
நம்பிக்கையின் மறுபெயர்
நம் நட்பு..
மண்ணில் நாம் உள்ளவரை
நம்மில் நிலைத்திருக்கும்
நம் நட்பு...
Saturday, July 11, 2009
நாம் படைத்த உறவு
Posted by Aravind Thiagarajan at 10:24 PM 0 comments
தோழியின் தோழமை...
என்று நீ என்
தோழி ஆனாய்
என்று எனக்கு
தெரியவில்லை
அனால்
அன்று முதல்
நித்தம் என்
நினைவில் ஏதோ
ஓர் வடிவில்
நீ இல்லாமல் இல்லை...
இனிமையாய் பழகினாய்
என் இதயம் புகுந்தாய்
என் உள்ளத்தில் உதிப்பவைகளை
உள்ளபடி உன்னிடத்தில்
உரைக்கும் உரிமை கொடுத்தாய்...
புரிதல் வளர்த்தாய்
பகிர்தலின் பயனை உணர்த்தினாய்...
நீ அறியாமல்
நம் புன்னகையில்
நான் தொலைத்த
துன்பங்கள் பல..
உன்னால் என்
மனதில் மலர்ந்த
மகிழ்ச்சிகள்
பற்பல...
தோழியே
என் சுவாசம்
இந்த காற்றில்
உள்ளவரை
நான் என்றென்றும்
இருப்பேன்
உன் தோழனாய்...
Posted by Aravind Thiagarajan at 9:53 PM 0 comments
???
நான் வசித்த கருவறையில்
எனக்கு முன் வசித்திருந்தாள்...
எனை வரவேற்க எனக்கு முன்
இவ் உலகம் வந்தாள்...
நான் புவியை தொட்டவுடன்
ஒரு பூவென தொட்டு உணர்ந்தாள்....
அதுவரை அனைவரது அன்பையும்
அளவில்லாமல் அனுபவித்தவள் அதில்
எனக்கு சிறிது பங்கு கொடுக்க
சின்ன சினம் கொண்டாள்...
சில நாட்களில் அவளது
அன்பு சிறையில் என்னை அடைத்து அணைத்தாள்...
பள்ளி அழைத்துச் சென்றாள்
பழக கற்றுக் கொடுத்தாள்
அன்பாய் அரானாய் காத்தாள்...
அழகாய் இருக்க கற்றுக் கொடுத்தாள்..
உள்ளம் பகிர்ந்தாள்...
காலங்கள் கரைய எங்கள் உறவு உறுதியானது...
ஈன்றவளிடம் உரைக்காததை இவளிடம் உரைத்தேன்..
கால் நூற்றாண்டாய் இவளுடன் நான் பகிர்ந்தது
இன்னும் பல நூற்றண்டுகளுக்கு என் நினைவில் இருக்கும்..
இவள் என் தமக்கை அல்ல
இவள் என் ஆன்மாவின் தோழி...
Posted by Aravind Thiagarajan at 9:11 PM 0 comments
நட்புச்சிலந்திகள்
இனைய வளைக்குள்
வரும் அன்பர்களை
நண்பர்களாய் மாற்றி
அன்பினால் அகத்தினுள்
விழுங்கும் நட்புச்சிலந்திகள்
நாம்....
Posted by Aravind Thiagarajan at 9:01 PM 0 comments
நீயும் நீரும்
நீயின்றி
நான் வாழ்வது
நீரின்றி
நிலம் வாழ்வது
போல்...
Posted by Aravind Thiagarajan at 8:59 PM 0 comments
இனையதள நட்பு...
முகம் கானா
நண்பர்கள் நாம்
ஆனால்
அகம் நம்
அன்பின் ஆழம்
அறியும்...
நம்மிடையே எதிர்பார்ப்புகள்
எல் அளவும் இல்லை
அதனால்
ஏமாற்றங்களுக்கு வழியே இல்லை...
உலகில் பல புள்ளிகளில்
நாம் வாழ்ந்தாலும்
நட்பென்னும்
ஓர் புள்ளியில்
இணைகிறோம்..
இங்கு தொடங்கும்
நம் நட்பு
தொடரும்..
வளரும்..
வாழும்..
நாம் வாழும் வரை...
Posted by Aravind Thiagarajan at 8:47 PM 0 comments
மலர் விற்கும் மொட்டு
ஒரு மொட்டு
மலர்களை
விற்பனை செய்கிறது...
பூ விற்கும் சிறுமி...
Posted by Aravind Thiagarajan at 6:35 PM 0 comments