BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Saturday, July 11, 2009

???

நான் வசித்த கருவறையில்
எனக்கு முன் வசித்திருந்தாள்...
எனை வரவேற்க எனக்கு முன்
இவ் உலகம் வந்தாள்...
நான் புவியை தொட்டவுடன்
ஒரு பூவென தொட்டு உணர்ந்தாள்....

அதுவரை அனைவரது அன்பையும்
அளவில்லாமல் அனுபவித்தவள் அதில்
எனக்கு சிறிது பங்கு கொடுக்க
சின்ன சினம் கொண்டாள்...
சில நாட்களில் அவளது
அன்பு சிறையில் என்னை அடைத்து அணைத்தாள்...

பள்ளி அழைத்துச் சென்றாள்
பழக கற்றுக் கொடுத்தாள்
அன்பாய் அரானாய் காத்தாள்...
அழகாய் இருக்க கற்றுக் கொடுத்தாள்..
உள்ளம் பகிர்ந்தாள்...

காலங்கள் கரைய எங்கள் உறவு உறுதியானது...
ஈன்றவளிடம் உரைக்காததை இவளிடம் உரைத்தேன்..
கால் நூற்றாண்டாய் இவளுடன் நான் பகிர்ந்தது
இன்னும் பல நூற்றண்டுகளுக்கு என் நினைவில் இருக்கும்..
இவள் என் தமக்கை அல்ல
இவள் என் ஆன்மாவின் தோழி...

0 comments: