என்று நீ என்
தோழி ஆனாய்
என்று எனக்கு
தெரியவில்லை
அனால்
அன்று முதல்
நித்தம் என்
நினைவில் ஏதோ
ஓர் வடிவில்
நீ இல்லாமல் இல்லை...
இனிமையாய் பழகினாய்
என் இதயம் புகுந்தாய்
என் உள்ளத்தில் உதிப்பவைகளை
உள்ளபடி உன்னிடத்தில்
உரைக்கும் உரிமை கொடுத்தாய்...
புரிதல் வளர்த்தாய்
பகிர்தலின் பயனை உணர்த்தினாய்...
நீ அறியாமல்
நம் புன்னகையில்
நான் தொலைத்த
துன்பங்கள் பல..
உன்னால் என்
மனதில் மலர்ந்த
மகிழ்ச்சிகள்
பற்பல...
தோழியே
என் சுவாசம்
இந்த காற்றில்
உள்ளவரை
நான் என்றென்றும்
இருப்பேன்
உன் தோழனாய்...
Saturday, July 11, 2009
தோழியின் தோழமை...
Posted by Aravind Thiagarajan at 9:53 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment