BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Thursday, April 30, 2009

சென்னை அரட்டை அறை எண் ஏழின் தொடங்கு பாடல்

(இப்பாடல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "காதலிக்க நேரமில்லை" என்ற தொடரின் தொடங்கு பாடலான "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு, உன்னை தேடி வாழ்வின் மொத்தம் அர்த்தம் தருவேன்" என்ற மெட்டில் பாட முயற்சித்து இயற்றியது)

எங்கெங்கோ வாழுகின்ற நண்பர்கள் நாம்
அனைவரும் கொஞ்ச நேரம் வாழும் அறை
சென்னை ஏழுதான்......
இங்கு வரும் இரவு நேரம் கொஞ்ச நேரம் தான்..
அந்த நேரம் இன்பத்திற்கு பஞ்சம் இல்லையே...
தத்தி தாவும் உந்தன் இதயம்
துள்ளி திரியவே இங்கு வந்து
இன்ப இசையாய் பாடல் பாடுங்கள்..
அறைக்குள் வரும் அனைவருமே
எந்தன் நண்பரே...ஒ...
மைக்கை பிடிக்க எவருக்குமே தடையும் இல்லையே ...
மனதில் உள்ள சுமைகளை இறக்கி வையுங்கள் ...
இங்கு வந்து எங்களோடு பேசி மகிழுங்கள்....ஒ....
சென்னை ஏழில் உள்ள அனைவருமே
நம் உள்ளம் விரும்பும் இனிய நண்பரே...
இங்கு மலர்ந்த எங்கள் நட்பிற்கு
என்றுமில்லை முற்றுபுள்ளியே...
களம் அமைத்த யாகூவிற்கும்.....
வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும்
நன்றி கலந்த வணக்கம் கூறி
வாழ்த்து சொல்வது... உங்கள் நண்பனே..

தனிமை பாடல்

(இப்பாடல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "காதலிக்க நேரமில்லை" என்ற தொடரின் தொடங்கு பாடலான "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு, உன்னை தேடி வாழ்வின் மொத்தம் அர்த்தம் தருவேன்" என்ற மெட்டில் பாட முயற்சித்து இயற்றியது)


எதிரில் வருவது நீ என்றால்.... எகிறிக் குதிக்குது எந்தன் மனசு..
எதிர் வந்த நீயும் பார்க்காவிட்டால் என்னவாகுமோ எந்தன் மனசு...

உன்னை கண்ட நாள் முதல் எந்தன் விழிகள்
இன்று வரை என்னை காண மறுக்கிறதே...
எதை காண கண் கொண்டு பார்த்தாலும்
அங்கு தெரிவது உந்தன் உருவே ...
எந்தன் செவியில் நுழையும் இன்ப இசையில்
என்றும் ஒலிப்பது உந்தன் குரலே...
இத்தனை இன்பம் தந்த நீ எனக்கு
உந்தன் இதயத்தில் இடம் தர மாட்டாயோ.....

எதிரில் வருவது நீ என்றால் எகிறிக் குதிக்குது எந்தன் மனசு..
எதிர் வந்த நீயும் பார்க்காவிட்டால் என்னவாகுமோ எந்தன் மனசு...

என் இதயத்தில் நீ நுழைந்ததுமே
என்னுளே மாற்றங்கள் ஓராயிரம்....
மாற்றங்களை நான் மறைக்க
நான் படும் துயரங்கள் பலவாயிரம்...
மற்றவர்கள் அதனை உணர்வதற்குள்
நீ உணர்ந்தால்
என்னுளே இன்பம் மட்டும் பலவாயிரம்.....

உன் நினைவை கொண்ட தனிமை இனிமையே ...ஒ.....
நம் இளமை கண்ட இனிமை அருமையே..ஒ.....

எதிரில் வருவது நீ என்றால் எகிறிக் குதிக்குது எந்தன் மனசு..
எதிர் வந்த நீயும் பார்க்காவிட்டால் என்னவாகுமோ எந்தன் மனசு...

Tuesday, April 21, 2009

முதல் மாற்றம்

அகவை பதினாறில்
பல நாள் உன்னை காண்கையில்
ஓர் நாள் உன் விழி என்னிடம்
ஓர் மொழி பேசியது....
என் விழி என்னை
கேட்க்காமல் மறுமொழி கூற..
என் உள்ளத்தின்
உவகையினால் உடல் எங்கும்
ஓர் உற்சாகம்...
இதனால் என்னுள்ளே
ஏற்பட்டது முதல்
ரசாயன மாற்றம்.....
காலங்கள் கரைந்து ஓடின...
அந்த காலத்தோடு
நீயும் கரைந்து போனாய்...
நாட்கள் பல ஆனாலும்
மறக்கவில்லை அந்த
முதல் மாற்றம்...
ஆனால்
இவ் உலகில்
மாற்றம் ஒன்றே
மாற்றம் இல்லாதது...
நான் மாறித்தான்
நான் மறந்துதான் ஆக வேண்டும்
அந்த முதல் மாற்றத்தை
எங்கோ எனைகான
எனக்காக காத்திருக்கும்
என்னவனுக்காக........

Sunday, April 19, 2009

என் விழியில் நீ

உணை கண்ட
என் விழிகள்
எனை காண
மறுக்கிறதே...

எதை காண
பார்த்தாலும் அதில்
உன் உருவம்
தெரிகிறதே...

என் விழியில்
விழுந்த நீ என்
கருவிழியை விட்டு
பிரியலையே...

நான் காணும்
உருவங்கள்
நம்மை பிரிக்க
விரும்பலையோ...

அதன் காரணமாய்
என் விழிகளுக்குள்
அவை வர
விரும்பலையோ...

கோவிலில் காவல்

மதங்களின் பெயரால்
மனிதர்கள் மோதிக்கொண்டதால்
மரணங்கள் பல ....
இதனால்
மனிதர்களை காக்கும்
கடவுள்களின் கோவில்களை காக்க
மனிதர்கள் பலர்...

பிரிவில் வருத்தம் இல்லை

உனக்காக
என்னை நான்
முழுதாய் மாற்றி
என் அன்பை
நான் முழுதாய்
வெளிபடுத்தியும்
நீ என்னை புரிந்துகொள்ளாதது
என் தவறல்ல....
என்னை நீ பிரிகையில்
எனக்கு வருத்தம் இல்லை..

Saturday, April 18, 2009

ஒரு பெண்ணின் முதல் கவிதை

அவனுடன்
பழகிய நாட்களில்
இன்று தான் அவன்
என் அப்பாவை விட
என் அண்ணனை விட
என் செல்ல தம்பியை விட
அழகாய் தெரிந்தான்....
அவன் தான்
எனக்காக பிறந்த
என்னவனோ...

முதல் அன்பளிப்பு

உன் தூய அன்பின்
மறு வடிவமாய்
உன் சக்தியை மீறி
நீ எனக்கு கொடுத்த
முதல் அன்பளிப்பை விட
அதை உன் கரங்களில் இருந்து பெறுகையில்
உன் தொடு விரல்
உன்னை அறியாமல்
என்னை முதன்முதலாய்
தீண்டியதன் இன்பமே
என்றைக்கும்
என் வாழ்வில்
நீ கொடுத்து
நான் பெற்ற
மிகப் பெரிய பொக்கிஷம்......

Friday, April 17, 2009

ரோஜா

நீ கொடுத்த
ரோஜா வாடுவதற்குள்
இன்னொருவனுடன்
நீ...
என் தோட்டத்திலும்
ரோஜாக்கள் ஏராளம் ...
அவை அனைத்தும்
எனை காண
எங்கோ காத்திருக்கும்
என்னவளுக்கு மட்டும்....

பனித்துளி

என்னை பிரிகையில்
உன் பாதத்தில்
பனித்துளி..
என் கண்களிலிருந்து....
இன்னுமோர் துளி
வானில் இருந்து...
கண்ணீர் குளம்
உன் கண்களில்...

கடலை

பல வண்ணங்களில் உடை அணிந்து
வர்ணனைகள் பல செய்து
அர்த்தமில்லா வார்த்தைகள் பல பேசி
இருவரின் அன்றாட வாழ்க்கையை
ஒருவருக்கொருவர் சரித்திரமாய் பதிவு செய்து
மற்றவற்கு சற்றே தரித்திரமாய் காட்சியளித்து
மோகத்தீயில் வறுபட்டு சற்றே கருகுவதே
கடலையாம்....

அவர்கள்

அவர்கள் அனைவரும்
என்னை எள்ளி நகையாடுகையில்
என் முகம் மட்டும்
வாடுவதை கண்டு
அவர்கள் முகமும் மனமும்
உற்சாகத்தில் மலரும்..
நான்
எதனாலோ மனம்
நோவதை கண்டு
என்னினும் வேகமாய்
அவர்களின் மனம்
நொறுங்கும்....
அவர்கள் என் நண்பர்கள்....

Saturday, April 11, 2009

ஹைக்கூ

நிலா கண்ட
நிலவுகள்
உன் கண்கள்...

கீழ் நோக்கி அடித்தாலும்
மேல் நோக்கி எழும்
பந்து நான்..

கற்றது கை மண் அளவு
கல்லாதது உலக அளவு
உன்னை பற்றி...

மனிதன் படைக்கும்
தெய்வம்
குழந்தை..

புரிதல் பிரிதல்

இருவருக்குள்
பிரிதல் நிகழாமலிருக்க
புரிதலே காரணம்...
பிரிதல் கூட
புரிதலின் வடிவம்தான்
இனி புரிந்துகொள்ள முடியாது
என்ற புரிதலின்
முடிவுதானே
பிரிதல்...

என் உணர்வுகளை உணர..

நானுணை கண்ணே,
முத்தே, மணியே
என்றெல்லாம் அழைக்கமாட்டேன்..
இவை அல்ல நீ எனக்கு..

என் உயிரை
உயிரோடு
வைத்திருக்கும்
உயிர் நீ...

உன்னிடம் உரைக்க
என் உள்ளத்தில்
உண்டு ஆயிரமாயிரம்
உணர்வுகள்....

உணர்வுகளை உரைக்க
இவ் உலகில்
வார்த்தைகள்
இல்லை...

உணர்வுகளை உணர
உன் உளமார
என் உள்ளத்தினுள்
வந்துவிடு

வந்துணர்ந்து
நம் வாழ்க்கைக்கான
புதிய பரிமாணத்தை
தந்துவிடு....

நீயும் கடவுள்

கடவுள்
இவ்வுலகை
படைத்தார்..
நீயும் கடவுள்தான்
எனக்காக
ஓர் உலகை
படைத்தாயே...

கனாவில் உன் வினா

ஆதவன் உதிக்கும் முன்னே
உன் புகைபடத்தில் விழித்து
பகலெல்லாம் உனக்காக உழைத்து
மயக்கும் மாலையில்
உன் விழிகளை
நேரில் சந்தித்து
காதல் மொழி பல பேசி
இன்பத்துடன் தனியே
உறங்க சென்றால்
கனவில் நீ....

உனை கண்டு கனவில்
நான் புன்னகைக்க
"என் ஞாபகமா?"
என வினவுகிறாய்
உன்னை மறந்தால்தானடி
ஞாபகப்படுத்த.....

உயிர் கொடுத்த உயிர்களின் நிலை...

ன்பினால் பிறந்தான்
னந்தமாய் வளர்ந்தான்
ன்பம் மட்டுமே அளித்தனர்
ன்றெடுத்த பெற்றோர்....
ள்ளம் விரும்பிய கல்வி
தியம் நிறைந்த வேலை
எல்லாம் அடைந்து
ற்றத்துடன் வாழ்கின்றான்..
ம்பொன் சிலையாய் மனம் விரும்பிய மனைவி என
ப்பற்ற வாழ்க்கையை கொடுத்தனர் பெற்றோர்..

வை வயதில் பெற்றோர் வாழும்
முதியோர் இல்ல முகவரியை மறந்தானே..
ம் இவனை படைத்த இருஉயிர்கள்
இவனுக்காக அங்கு பிராத்தனையில்.....

எனை பிரிந்த என்னுயிர்

முதன் முதலில்
உன் விழிகளை
கண்ட என் கண்ணிமைகள்
இமைக்க மறந்தன....
இமைக்க மறந்த
இமைகளை மனம்
இமைக்க உரைத்தது.....

உன் சுவாசம்
கலந்த காற்று
என் சுவாசம் சென்றது...
உன் சுவாசம் உணர்ந்த
என் இதயம்
துள்ளி துடித்தது...
துள்ளி துடித்த
இதயத்தினால் அங்கம்
இயல்பை இழந்தது....

இதனிடையே
உன் விழிகள்
பேசிய மொழிகளை
என் விழிகள்
உணர்ந்தன..
உணர்ந்த விழிகள்
உள்ளத்திற்கு
உன் செய்தி
சொன்னது...
சொன்ன செய்தி
கேட்ட அங்கம் அனைத்தும்
மெல்ல இயல்பை
அடைந்தன...

நல்ல வேளை
பூவியை விட்டு
போகவிருந்த என் உயிர்
உன்னை அடைந்தது...
ஆம்
உன்னை
பார்த்த நொடிகளிலே
என் உயிர்
என்னை பிரிந்து
உன்னை சேர்ந்தது...

முக்காலம்

உனை கண்ட நொடியிலிருந்து
நினைவுகளில் உனை நிறுத்தி
நிகழ்வுகளில் உனை பொருத்தி
நிகழ்காலத்தை வசந்தமாக்கி
பசுமையான இறந்த காலத்தை
பதிவு செய்தேன்....
என் எதிர் காலம்
உன் பதிலில்தானடி
ஒளிந்திருக்கிறது....

விடுதலை

நான்
எல்லோரும் போல்
எச்சிறையில் அடைத்தாலும்
விடுதலை கோருவேன்
சுதந்திரம் அடைவேன்....
ஆனால்
நீ என்னை
உன் மனச்சிறையில்
அடைதால் மட்டும்
என்றும் என்றென்றும்
மாட்டேன்...

நிலா கண்ட நிலவுகள்

விண்ணில் உதித்துகொண்டிருந்த நிலா
மண்ணில் உன்னை கண்டது...
இரவில் முழுதாய் உதித்து
இரு நிலவுகளாய்
உன் கண்களை ரசித்தது...
நீ கண்மூடி உறங்கியதை
கண்டு சினமுற்ற நிலா
சூரியனை உதிக்க அனுப்பியதோ....

Saturday, April 4, 2009

முடிவும் தொடக்கமும்

எல்லா தொடக்கங்களின்
முடிவு
முடிவுதான்..
ஒவ்வொரு முடிவிலும்
ஒரு தொடக்கம்
ஒளிந்திருக்கும்...

மனதிற்கு ஒப்பாத
முடிவில் ஒளிந்திருக்கும்
தொடக்கத்தை அறிந்து
முயன்றால்
மனது விரும்பும்
முடிவை அடையலாம்...

செயலின் தொடக்கம்
சிந்தனையின் முடிவுதானே....

உன் பிம்பம்

நீ
என் கண்களில் நுழைந்து
என் அணுக்களை பிளந்து
என் உயிரினில் நீ கலந்ததால்
என் கண்ணாடியில்
எனை நான் பார்க்கும் போது
உன் பிம்பம்
தெரிகிறதோ...

முதல் மற்றும் இறுதி சமர்ப்பணம்

என்னில் உனை உணர்ந்ததால்
உன்னில் எனை உணர
நான் முயல
உன்னில் வேறு யாரோ...
இது யார் தவறு?...
யவர் தவறும் இல்லை....
இயற்கையான நிகழ்வு...
இன் நிகழ்வை
என் நினைவிலிருந்து
அகற்றுவதே இதுவரை
எனை காணமல்
எங்கோ எனக்காக
வாழும் என்னவளுக்கு
நான் செய்கும்
முதல் சமர்ப்பணம்....
உனக்கு செய்கும்
இறுதி சமர்ப்பணம்....

போட்டி

என் ஆன்மாவும்
என் இதயமும்
போட்டிட்டால்
வெல்வது யார்?
கண்டிப்பாக நீ தான்....
இரண்டிலும் முழுவதுமாய்
இருப்பது நீ தானே.....