BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Thursday, April 30, 2009

தனிமை பாடல்

(இப்பாடல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "காதலிக்க நேரமில்லை" என்ற தொடரின் தொடங்கு பாடலான "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு, உன்னை தேடி வாழ்வின் மொத்தம் அர்த்தம் தருவேன்" என்ற மெட்டில் பாட முயற்சித்து இயற்றியது)


எதிரில் வருவது நீ என்றால்.... எகிறிக் குதிக்குது எந்தன் மனசு..
எதிர் வந்த நீயும் பார்க்காவிட்டால் என்னவாகுமோ எந்தன் மனசு...

உன்னை கண்ட நாள் முதல் எந்தன் விழிகள்
இன்று வரை என்னை காண மறுக்கிறதே...
எதை காண கண் கொண்டு பார்த்தாலும்
அங்கு தெரிவது உந்தன் உருவே ...
எந்தன் செவியில் நுழையும் இன்ப இசையில்
என்றும் ஒலிப்பது உந்தன் குரலே...
இத்தனை இன்பம் தந்த நீ எனக்கு
உந்தன் இதயத்தில் இடம் தர மாட்டாயோ.....

எதிரில் வருவது நீ என்றால் எகிறிக் குதிக்குது எந்தன் மனசு..
எதிர் வந்த நீயும் பார்க்காவிட்டால் என்னவாகுமோ எந்தன் மனசு...

என் இதயத்தில் நீ நுழைந்ததுமே
என்னுளே மாற்றங்கள் ஓராயிரம்....
மாற்றங்களை நான் மறைக்க
நான் படும் துயரங்கள் பலவாயிரம்...
மற்றவர்கள் அதனை உணர்வதற்குள்
நீ உணர்ந்தால்
என்னுளே இன்பம் மட்டும் பலவாயிரம்.....

உன் நினைவை கொண்ட தனிமை இனிமையே ...ஒ.....
நம் இளமை கண்ட இனிமை அருமையே..ஒ.....

எதிரில் வருவது நீ என்றால் எகிறிக் குதிக்குது எந்தன் மனசு..
எதிர் வந்த நீயும் பார்க்காவிட்டால் என்னவாகுமோ எந்தன் மனசு...

0 comments: