BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Saturday, April 11, 2009

கனாவில் உன் வினா

ஆதவன் உதிக்கும் முன்னே
உன் புகைபடத்தில் விழித்து
பகலெல்லாம் உனக்காக உழைத்து
மயக்கும் மாலையில்
உன் விழிகளை
நேரில் சந்தித்து
காதல் மொழி பல பேசி
இன்பத்துடன் தனியே
உறங்க சென்றால்
கனவில் நீ....

உனை கண்டு கனவில்
நான் புன்னகைக்க
"என் ஞாபகமா?"
என வினவுகிறாய்
உன்னை மறந்தால்தானடி
ஞாபகப்படுத்த.....

1 comments:

Anonymous said...

உனை கண்டு கனவில்
நான் புன்னகைக்க
"என் ஞாபகமா?"
என வினவுகிறாய்
உன்னை மறந்தால்தானடி
ஞாபகப்படுத்த..... ..........
nice nice.......reena84