BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Saturday, April 11, 2009

எனை பிரிந்த என்னுயிர்

முதன் முதலில்
உன் விழிகளை
கண்ட என் கண்ணிமைகள்
இமைக்க மறந்தன....
இமைக்க மறந்த
இமைகளை மனம்
இமைக்க உரைத்தது.....

உன் சுவாசம்
கலந்த காற்று
என் சுவாசம் சென்றது...
உன் சுவாசம் உணர்ந்த
என் இதயம்
துள்ளி துடித்தது...
துள்ளி துடித்த
இதயத்தினால் அங்கம்
இயல்பை இழந்தது....

இதனிடையே
உன் விழிகள்
பேசிய மொழிகளை
என் விழிகள்
உணர்ந்தன..
உணர்ந்த விழிகள்
உள்ளத்திற்கு
உன் செய்தி
சொன்னது...
சொன்ன செய்தி
கேட்ட அங்கம் அனைத்தும்
மெல்ல இயல்பை
அடைந்தன...

நல்ல வேளை
பூவியை விட்டு
போகவிருந்த என் உயிர்
உன்னை அடைந்தது...
ஆம்
உன்னை
பார்த்த நொடிகளிலே
என் உயிர்
என்னை பிரிந்து
உன்னை சேர்ந்தது...

0 comments: