BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Saturday, April 11, 2009

என் உணர்வுகளை உணர..

நானுணை கண்ணே,
முத்தே, மணியே
என்றெல்லாம் அழைக்கமாட்டேன்..
இவை அல்ல நீ எனக்கு..

என் உயிரை
உயிரோடு
வைத்திருக்கும்
உயிர் நீ...

உன்னிடம் உரைக்க
என் உள்ளத்தில்
உண்டு ஆயிரமாயிரம்
உணர்வுகள்....

உணர்வுகளை உரைக்க
இவ் உலகில்
வார்த்தைகள்
இல்லை...

உணர்வுகளை உணர
உன் உளமார
என் உள்ளத்தினுள்
வந்துவிடு

வந்துணர்ந்து
நம் வாழ்க்கைக்கான
புதிய பரிமாணத்தை
தந்துவிடு....

0 comments: