எதிரில் வருவது
நீ என்றால்
எகிறிக் குதிக்குது
எந்தன் மனசு
எதிர் வந்த
நீ பேசாவிட்டால்
என்ன ஆகுமோ
என் மனசு...
உன்னை பார்த்த
என் விழிகள்
என்னை காண
மறுக்கிறதே..
எதை காண
கண் பார்த்தாலும்
உன் உருவே
தெரிகிறதே...
இன்ப இசை
எந்தன் செவியினுள்
சென்றாலும் உந்தன்
குரலே ஒலிக்கிறதே..
இத்தனை இன்பம்
தந்த நீ
உந்தன் இதயத்தில்
இடம் தரமாட்டாயா?....
எந்தன் மனதினுள்
நீ நுழைந்ததுமே
என்னுள்ளே
மாற்றங்கள் ஓராயிரம்...
அந்த மாற்றங்களை
நான் மறைக்க
நான் படும்
சிரமங்கள் பலவாயிரம்...
மாற்றங்களை மற்றவர்
உணரும் முன்னே
நீ முதலில்
உணர்ந்து விடு
என்னை உணர்ந்து என்
பிறப்பின் பயனை
நீ எனக்கு
தந்து விடு....
Friday, May 1, 2009
என் உணர்வின் உணர்வுகள்
Posted by Aravind Thiagarajan at 4:07 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
EXTREMELY NICE AND SUPERB
UR ALIEN
@UR ALIEN:thanks alien-Aravind
Poem is really good.
Keep it up champ.
Post a Comment