BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, May 10, 2009

கடல் கடந்த உணர்வுகள்

நீ கடல் கடந்து வாழ்ந்தாலும்

நித்தம் என் கனவில் வருவது நீ தான்
நிலமும் நீரும் நம்மை பிரித்தாலும்
நம் நினைவுகள் நம்மை இணைக்கும்....

நான் உதிக்கும் நிலவை கண்டு
உன்னை நினைக்கையில்
நீ மயக்கும் மாலையில்
என்னில் மயங்குகிறாய் .....

இருவரும் இணைந்து
இயற்கையோடு
இணைய முடியா
தூரத்தில் நாம்....

நம்மிடையே தூரமும் காலமும்
அதிகம் என்றாலும்
அடி மனதில்
அழியா ஆன்மாவாய்
நமக்கு நாம்...

0 comments: