நீ கடல் கடந்து வாழ்ந்தாலும்
நித்தம் என் கனவில் வருவது நீ தான்
நிலமும் நீரும் நம்மை பிரித்தாலும்
நம் நினைவுகள் நம்மை இணைக்கும்....
நான் உதிக்கும் நிலவை கண்டு
உன்னை நினைக்கையில்
நீ மயக்கும் மாலையில்
என்னில் மயங்குகிறாய் .....
இருவரும் இணைந்து
இயற்கையோடு
இணைய முடியா
தூரத்தில் நாம்....
நம்மிடையே தூரமும் காலமும்
அதிகம் என்றாலும்
அடி மனதில்
அழியா ஆன்மாவாய்
நமக்கு நாம்...
0 comments:
Post a Comment