BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, May 10, 2009

எனது ஐம்பதாவது கவிதை -"சமர்ப்பணம்"

அணுவை கருவாக்கி

கருவை உயிராக்கி
உயிரை உடலாக்கி
உடலை எனதாக்கி
என்னை இவுலகம்
அழைத்து வந்தது
என் அம்மா.....

தம் செந்நீரை நன்னீராய் பாய்ச்சி
தம் உழைப்பை உரமாக்கி
தம்மை என்னுள் விதைத்து
என்னை விளைவித்தார்கள்
எனை ஈன்ற பெற்றோர்...

ஆண்டுகள் ஓடின...
நான் விளைந்தேன்
நற் பயிராய்....
நான் மலர்ந்தேன்
நன் மலராய்....

விளைவித்த பயிராய்
என்னை அறுவடை செய்யாமல்
மலர்வித்த மலராய்
எனை கொய்யாம்மல்
எனை பாசமுடன் என்றும் நேசித்தனர்..

நான் பயிராய் கருகாமலும்
நான் மலராய் உதிராமலும்
தன் அன்பை நீராய் என்றும் பாய்ச்சி
எனை அரண் போல் காக்கும்
என் பெற்றோர்க்கு
எனது ஐம்பதாவது கவிதை
சமர்ப்பணம்......