பெய்யன பெய்யும்
மழையில்
ஓர் குடையில்
உன்னுடன் இணைந்து
நான் நடக்கையில்
என் இதயத்தில்
இளஞ்சாரல்...
மழை கொணர்ந்த
குளிரில், வெப்பம்
நிறைந்த உன் சுவாசம்
என் சுவாசம்
செல்ல என்னுளே
ஓர் சிறு புயல்...
விண்ணில் மின்னிய
மின்னலை கண்டு
உன் விழிகள்
இமை மூடி
இமை திறக்க
என் விழிகளில்
ஓராயிரம் மின்னல்கள் ....
பெய்யன பெய்த
மழை சட்டென நின்றதும்
நீ என்
குடை அகன்றதும்
என் இதயத்தில்
சிறு இடி ...
மீண்டும்
ஓர் குடையில்
உன்னுடன் நடக்க
என் மனதினுள்
ஆசை மேகங்கள்
ஆயிரம் சூழ்ந்தன
விண்ணில் மழை வேண்டி...
உன்னால்
என் மனதினுள்
மழை பொழிய
விண்ணில்
மழை வருமோ...
Tuesday, May 26, 2009
மனதினுள் மழை
Posted by Aravind Thiagarajan at 7:51 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Great - Vim+la
Post a Comment