எண்ணிப் பார்க்கையில்
எண்ணத்தில் தோன்றவில்லை
என்று நாம்
நண்பர்கள் ஆனோம்
என்று
நம்முள் ஏற்பட்ட
சில நிகழ்வுகள்
நல்ல நினைவுகளாய்
உருபெற்று நம்
நட்பிற்கு வித்திட்டது
வித்திட்ட நிகழ்வுகள்
நம் நினைவிலில்லை
காரணம் வித்திட்ட
அக்காலத்தை விட
நம் நட்பு
வளரும் இக்காலம்
வசந்த காலமாய்
இருப்பதனாலோ......
Sunday, March 29, 2009
நட்பில் மறந்த நினைவுகள்
Posted by Aravind Thiagarajan at 9:32 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment