என் கண்ணுள்ளே
நீ நுழைந்ததுமே
என் இதயத்தில்
உன் சாயல்
உன் சாயலிலே
கண்ட கணவெல்லாம்
மறந்தேனே
நான் சிறிதாய்
முழு மனதாய்
நினைத்ததெல்லாம்
மறந்தேனே
அரை மனதாய்
உன் சாயலிலே
உன் நோக்கி
சாய்ந்தேனே
நான் முழுதாய்
நடக்கும் சாலையிலும்
மறக்கவில்லை
மறையவில்லை
உன் சாயல்
மழை கொணர்ந்த
சாரலிலும்
கண்டேனே
உன் சாயல்
நான் கண்திறந்து
காணும் பொருளெல்லாம்
கண்டேனே
உன் சாயல்
நான் கண்மூடி
சாய்கையிலும்
என் கண்ணுள்ளே
உன் சாயல்
Thursday, March 5, 2009
சாயல்
Posted by Aravind Thiagarajan at 8:40 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment